செய்திகள் :

சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!

post image

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்திருக்கிறது அமெரிக்கா. பிரிக்ஸ் அமைப்பில் மற்றொரு நாடான பிரேசிலும் 50 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா - பிரேசில் இணைந்து நடத்திய நகர்வு அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் சோயாபீன்ஸ் ஏற்றுமதி.

உலகிலேயே அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா. அந்நாட்டுக்கு சோயாபீன்ஸ் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருவது அமெரிக்கா. ஆனால், அந்த நிலை தற்போது மாறி வருகிறது. அமெரிக்காவிடமிருந்து சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யாமல், அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடான பிரேசிலிடமிருந்து சீனா இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை படிப்படியாகக் குறைத்து, வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வெகுவாகக் குறைத்துவிடும் நிலையில் உள்ளது சீனா.

வாஷிங்டனிலிருந்து, சோயாபீன்ஸ் இறக்குமதியை பிரசில்லாவுக்கு சீனா மாற்றியிருப்பது, அமெரிக்க வர்த்தகத்தின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம், அமெரிக்காவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் அமெரிக்க விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலையில் அமெரிக்காவிடமிருந்து சீனா 420,873 டன் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது பல பில்லியன் மதிப்புள்ளதால், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தினால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலையில் அமெரிக்கா உள்ளது.

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில... மேலும் பார்க்க

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!

அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரண... மேலும் பார்க்க

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

உலகம் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி ஏதோ ஓர் இடத்தில் முடிகிறது என்றால், அந்த கடைசி சாலை முடியும் இடம் நார்வேயில் அமைந்துள்ளது.நமது கிரகம் ஒரு கோளம் என்பதால் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. ஆனால், ஓரிடத்துக்க... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காஸா பகுதியில் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் (ஐபிசி) அமைப்பு அறிவித்துள்ளது.சா்வதேச அங்கீகாரம் பெற... மேலும் பார்க்க

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ... மேலும் பார்க்க

ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்

ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா... மேலும் பார்க்க