செய்திகள் :

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

post image

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் தாக்குதல் தொடங்கியதுடன், இருநாடுகளும் தங்களது வான்வழியைகளை மூடின. மேலும், இருநாடுகளிலும் வசித்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இத்துடன், இந்திய வான்வழியில் பாகிஸ்தானின் பயணிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையானது, கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்திய வான்வழியை பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக்கூடாது எனவும், இந்தத் தடையானது வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், நேற்று (ஆக.22) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையும் செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 40% முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! முதலிடத்தில் இருப்பவர் யார்?

The ban on Pakistan's use of Indian airspace has been extended until September 24th.

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமோலி மாவட்டத்த... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் ... மேலும் பார்க்க

மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மிசோரமில் பைராபி-சாய்ராங் ரயில் பாதையை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பதாக முதல்வர் லால்துஹோமா தெரிவித்தார். சாய்ராங் தலைநகருக்கு அருகில் அமைந்திருப்பதால், இந்த ரயில் பாதை ஐஸ்... மேலும் பார்க்க