செய்திகள் :

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

post image

காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளின் மீதான தாக்குதல்களினால், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருகள் மீதான தடை உள்பட அந்நாட்டுக்கு எதிரான புதிய நடவடிக்கைகளைக் கொண்டு வரப்போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் அறிவித்தார்.

இந்தத் திட்டத்துக்கு அவரது கூட்டணி உறுப்பினர்களிடம் இருந்து போதுமான ஆதரவுக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவசியமான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை எனக் கூறி அவர் தனது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கேஸ்பர் வெல்ட்காம்பின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, அவரது மைய-வலது ஒப்பந்தக் கட்சியின் மீதமுள்ள அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். இதனால், ஆட்சிக் கவிழும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த, ஜூன் மாதம் நெதர்லாந்தின் அரசை ஆட்சி செய்யும் 4 கட்சி கூட்டணிகளின் தலைவர்களில் ஒருவரான, இஸ்லாமியர் எதிர்ப்பாளர் கீர்ட் வில்டர்ஸ், குடியேற்றத்துக்கு எதிராகத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனால், நெதர்லாந்தின் அரசு கவிழ்ந்த நிலையில், அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் வரையில், மீதமுள்ள 3 கூட்டணிக் கட்சிகளும் தற்காலிக அரசை நிர்வாகம் செய்து வந்தன. மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டுக்கு எதிராகத் தடைகள் விதிப்பது குறித்த விவாதமானது நெதர்லாந்தின் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இத்துடன், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாததினால், விரக்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

Dutch Foreign Minister Caspar Veldkamp has resigned after failing to secure sanctions against the country over Israel's war on Gaza.

ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா... மேலும் பார்க்க

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில... மேலும் பார்க்க

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!

அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரண... மேலும் பார்க்க