செய்திகள் :

ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்!

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50% என்ற கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு ரஷியா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக இன்று(ஆக. 23) அறிவித்துள்ளது.

"கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வருகிற ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதன்படி, 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கான இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் இருக்கும். எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப்பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இதர பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அனுப்ப வேண்டும்.

எனவே, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது" என்று அறிக்கையில் கூறியுள்ளது.

India Temporarily Suspends Postal Services To US After Trump's Tariffs Over Russian Oil Purchase

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிர... மேலும் பார்க்க

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா ம... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில... மேலும் பார்க்க

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!

அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரண... மேலும் பார்க்க