செய்திகள் :

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அவரது வாட்ஸ்ஆப்பில் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்தது. பி.டி.எப் வடிவத்தில் அந்த அழைப்பிதழ் இருந்தது.

அழைப்பிதழோடு திருமணத்திற்கு வாருங்கள் என்றும் திருமண தேதி 30/08/2025 என்றும், அன்பு என்பது மகிழ்ச்சியின் வாயிலைத் திறக்கும் முதன்மை திறவுகோல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தத் திருமண அழைப்பிதழை ஷிண்டே திறந்தார். உடனே ஷிண்டேயின் போனை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திருடி ஷிண்டே வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.90 லட்சத்தை சைபர் கிரிமினல்கள் எடுத்துக்கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷிண்டே இது குறித்து ஹின்கோலி சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமண அழைப்பிதழ் மூலம் மோசடி செய்வது கடந்த ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு பலர் இது போன்ற மோசடியில் தங்களது பணத்தை இழந்தனர். கடந்த ஆண்டு ஹிமாச்சல பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் பைல்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்திருந்தனர். திருமண அழைப்பிதழ் மூலம் நடக்கும் மோசடிகளால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க