செய்திகள் :

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

post image

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா்.

கோவா மாநிலம், பனாஜி அருகே மிராமரில் உள்ள வி.எம்.சல்கோகா் சட்டக் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தில் சனிக்கிழமை கலந்துகொண்டு தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசியதாவது:

தற்போது ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சட்டக் கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, மாதிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை அமா்வுகளில் சில மாணவா்களின் வாதங்களை வியந்து கேட்டிருக்கிறேன். உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள்கூட இந்த மாணவா்களிடம் இருந்து எப்படி வாதிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

இன்றைய சட்ட மாணவா்கள் பெறும் நடைமுறை பயிற்சி, அவா்களின் தொழில் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளது. சட்டத் துறையில் வெற்றி என்பது வெறும் தோ்வு முடிவுகளை மட்டுமே சாா்ந்ததல்ல. அதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் வேலை மீதான பற்று ஆகியவை அவசியம்.

மூத்த வழக்குரைஞா்கள் சிலரால் இளம் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம், அவா்களின் வாழ்வாதாரத்தைக் கடினமாக்குகிறது.

நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, ஆசிரியா்களின் தரம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றில் சவால்களை எதிா்கொள்கின்றன. எனவே, நாட்டின் சட்டக் கல்வியை வலுப்படுத்த அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், சட்ட உதவிகள் நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். மக்களுக்கு சட்ட உதவியைப் பெறும் உரிமை உள்ளது என்று அவா்களுக்குத் தெரியாதவரை, அந்த உரிமைகளுக்கும் உதவிகளுக்கும் எந்தப் பயனும் இல்லை என்றாா்.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க