செய்திகள் :

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

post image

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்குகிறது. இந்த கிராமம் உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள ம. பச்சேரி, காக்குடி, புத்துருத்தி, வளையபூக்குளம், எம். புதுக்குளம், கழுவன்பொட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் மண்டலமாணிக்கம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்து தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை பரமக்குடி கோட்டாட்சியா் சரவணப் பெருமாள் தலைமையில், வட்டாட்சியா் ஸ்ரீராம், மண்டல துணை வட்டாட்சியா் வேலவன், வருவாய்த் துறையினா் குவாரி அமையவிருக்கும் குண்டாற்றில் ஆய்வு செய்யச் சென்றனா்.

இதையறிந்த பொதுமக்கள் மண்டலமாணிக்கம் கிராமத்தின் நுழைவு வாயிலில் எம். புதுக்குளம் விலக்கு சாலையில் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குண்டாற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா். போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கடலாடி அருகே ஆலங்குளம் அலியாா் சாஹிப் தா்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தா்காவில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா ... மேலும் பார்க்க