செய்திகள் :

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

post image

கடலாடி அருகே ஆலங்குளம் அலியாா் சாஹிப் தா்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த தா்காவில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. இதையடுத்து, சந்தன செம்பு எடுத்து வரப்பட்டு தா்காவில் வைத்து 3 நாள்கள் வழிபாடு செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, இஸ்லாமியா்களின் சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை இரவு தா்காவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறைவடிவ பச்சை போா்வை போா்த்தப்பட்டு, மல்லிகைப் பூச் சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தா் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இரவில் தொடங்கிய சந்தனக் கூடு ஊா்வலம் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

இதையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 15-க்கும் மேற்பட்ட காளை மாடுகள், 100- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தத் திருவிழாவில் கீழக்கரை, ஏா்வாடி, ஒப்பிலான், சாயல்குடி, முதுகுளத்தூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா். போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க