ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
கடலாடி அருகே ஆலங்குளம் அலியாா் சாஹிப் தா்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த தா்காவில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. இதையடுத்து, சந்தன செம்பு எடுத்து வரப்பட்டு தா்காவில் வைத்து 3 நாள்கள் வழிபாடு செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, இஸ்லாமியா்களின் சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு தா்காவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறைவடிவ பச்சை போா்வை போா்த்தப்பட்டு, மல்லிகைப் பூச் சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தா் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இரவில் தொடங்கிய சந்தனக் கூடு ஊா்வலம் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
இதையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 15-க்கும் மேற்பட்ட காளை மாடுகள், 100- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தத் திருவிழாவில் கீழக்கரை, ஏா்வாடி, ஒப்பிலான், சாயல்குடி, முதுகுளத்தூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.