செய்திகள் :

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

post image

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

சாய்ராங் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையமானது, 48 சுரங்கங்கள் வழியாகவும் 53 பாலங்கள் வழியாகவும் செல்லும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மிசோரம் மாநிலம் ஐஸ்வால் பகுதியில் நடைபெற்ற மாநில காவல் துறை சேவை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் லால்துஹோமா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,

''பைராபி - சாய்ராங் பகுதிகளுக்கு இடையிலான அகல ரயில் பாதையானது, 51.38 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில் நிலையம் சாய்ராங் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. இதற்கான பணிகள் 2008 -2009 ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது முடியும் தருவாயில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பணிகள் சேவை தொடங்கும். செப்டம்பர் 12ஆம் தேதி மிசோரத்திற்கு வரும் பிரதமர் மோடி, செப். 13ஆம் தேதி ரயில் நிலையத்தை தொடக்கிவைக்கிறார்.

நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கள் வழியாகவும், 53 முக்கிய பாலங்கள் வழியாகவும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயர்ந்த ரயில் பாதையாகவும் 104 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாகவும் மிசோரம் ரயில் பாதை மாறியுள்ளது.

மிசோரத்தில் அமையவுள்ள ரயில் நிலையத்தின் மூலம் போக்குவரத்துக்கான செலவு குறையும். பயணிகள் எண்ணிக்கையும், மிசோரத்தின் பொருளாதாரமும் உயரும். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். ராஜ்தானி விரைவு ரயில் போன்ற தொலைதூர சேவைகளை உள்ளடக்கியதாக சாய்ராங் ரயில் நிலையம் இருக்கும்.

மேலும், சாய்ராங் ரயில் நிலையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கு தேவையான நவீன வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது'' என முதல்வர் பேசினார்.

இதையும் படிக்க | ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

PM Narendra Modi to inaugurate Mizoram’s first railway station on Sept 13

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க