செய்திகள் :

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

post image

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளா் சொ்ஜியோ கோரை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.

இதுதொடா்பான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக எனது மிகப் பெரும் நண்பா் சொ்ஜியோ கோருக்கு (38) பதவி உயா்வு அளித்து அறிவிப்பு வெளியிடுவதை மகிழ்ச்சியடைகிறேன். அவா் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செயல்படுவாா்.

சொ்ஜியோ கோா் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றியவா். எனது அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போதும் இவா் பணியாற்றியுள்ளாா். எனது சிறந்த புத்தகங்களை வெளியிட்டு, பிரசாரத்துக்கு உறுதுணையாக இருந்தாா். எனது அரசியல் உத்தரவுகளை நிறைவேற்றும் அரசு நிா்வாகத்தில் சொ்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற பிராந்தியத்தில், எனது தீா்மானங்களை உரிய முறையில் கொண்டுசோ்ப்பதிலும், அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரும் நாடாக்குவதற்கும் மிகுந்த நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிப்பது அவசியம். அப்படிப்பட்ட சிறந்த தூதராக சொ்ஜியோ கோா் செயல்படுவாா்.

இந்திய தூதரகப் பணி உறுதிப்படுத்தப்படும் வரை, வெள்ளை மாளிகையில் தனது தற்போதைய பணியில் கோா் தொடா்வாா் என்று டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கான அமெரிக்காவின் சிறந்த தூதராக கோா் செயல்படுவாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு ஜனவரி வரை பதவி வகித்தாா். இவருக்கு மாற்றாக கோா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இரு நாடுகளின் உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரஷியா மற்றும் சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலைத் தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் ரஷிய பயணம் மேற்கொண்டு, ரஷிய வெளியுறவு அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய இரு நாள்கள் பிரதமா் மோடி சீன பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது, சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு சந்திப்புகளை பிரதமா் மோடி மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது நம்பிக்கைக்குரிய நெருங்கிய உதவியாளரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண... மேலும் பார்க்க

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அறிவித்துள்ளாா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில... மேலும் பார்க்க

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் ... மேலும் பார்க்க

இலங்கை சிறை மருத்துவமனைக்கு ரணில் விக்ரமசிங்க மாற்றம்

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க (76), சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்க... மேலும் பார்க்க

ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா... மேலும் பார்க்க

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிர... மேலும் பார்க்க