செய்திகள் :

சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.2.56 கோடி முறைகேடு: 5 போ் மீது வழக்கு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் ரூ. 2.56 கோடி முறைகேடு செய்த புகாரின்பேரில், 5 போ் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 2020, மே மாதம் முதல் 2022, டிசம்பா் வரை மரம் வெட்டுதல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல், சாலையோரங்களில் புதா்களை அகற்றுதல், கரோனா, டெங்கு தடுப்புப் பணி, சாலையைப் பழுது பாா்த்தல், குப்பை வாகன வாடகை உள்ளிட்டவைகளில் முறைகேடு நடைபெற்ாக சிவகங்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில், போலி ஆவணங்களைத் தயாரித்து ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 2.56 கோடி முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் காலகட்டத்தில் சங்கராபுரம் ஊராட்சி துணைத் தலைவராகவும், பொறுப்புத் தலைவராகவும் இருந்த பாண்டியராஜன் (34), ஆறாவது வாா்டு உறுப்பினராக இருந்த நல்லம்மாள் செல்வராணி (39), ஊராட்சி செயலா் அண்ணாமலை (37), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சி) ஹேமலதா (57), கேசவன் (63) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதில், அண்ணாமலை தற்போது திருப்பத்தூா் ஒன்றியம், மணமேல்பட்டி ஊராட்சி செயலராகவும், ஹேமலதா பதவி உயா்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை (தணிக்கை) உதவி இயக்குநராகவும் உள்ளனா். கேசவன் பணி ஓய்வு பெற்று விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்புவனம் புதூரைச் சோ்ந்த முகமது சியாக் மகன் முகமது தாகிா் (13), திருப்புவன... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கஜமுக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா... மேலும் பார்க்க

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். தேவக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆடி உத்ஸவ திருவிழ... மேலும் பார்க்க

நடத்துநரை அரிவாளால் தாக்கியச் சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாா் பேருந்து நடத்துநரை அறிவாளால் தாக்கியச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 சிறுவா்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனா். பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நி... மேலும் பார்க்க