செய்திகள் :

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

post image

ஒடிசாவில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு காவல் துறை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்திற்குட்பட்ட ரோர்கேலா பகுதியிலுள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், இளைஞர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடையணிந்தவாறு சாகசத்தில் ஈடுபட்டார்.

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக இவ்வாறு அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஸ்பைடர்மேன் உடையணிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியதால், சக பயணிகளுக்கும், நடைபாதையில் செல்வோரும் அச்சம் அடைந்தனர்.

அதிவேகமாகச் சென்றவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர், நெரிசல் மிகுந்த சாலையில் அதிவேகமாகச் சென்றது, நடைபாதையில் செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என காவல் துறையினர் ரூ.15,000 வரை அபராதம் விதித்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி புகைப்போக்கியான சைலன்ஸரை சீரமைத்து அதிக ஒலி எழுவதைப்போன்று வைத்திருந்ததற்காகவும், போக்குவரத்து விதிமீறலில் இவை வருவதால், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகசம் செய்ததற்கான காரணமும், காவல் துறையின் விசாரணையில் முரணாக இருந்ததால், அவரை காவல் துறையினர் கண்டித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க | வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

Spiderman' Goes On Stunt Spree On Bike In Odisha, Issued Rs 15,000 Fine

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க