செய்திகள் :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

பஹல்‌காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் விமர்சித்திருந்தார். அவருக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பதிலளித்துள்ளார்.

புணேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு காரணமான பாகிஸ்தான் போன்ற நமது எதிரிகளுடன் இந்தியா எந்த உறவும் வைத்திருக்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் உணர்கிறார்கள். இருப்பினும், கிரிக்கெட் போட்டிகளை ஆர்வத்துடன் பார்க்கும் மற்றொரு குழுவும் உள்ளது.

குஜராத் கடற்பகுதி அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

இன்று கனமழை, பயிர் சேதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற சில முக்கிய பிரச்னைகள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி போன்ற தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசுகின்றனர். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.

சிலர் எதிர்க்கட்சிகளுடன் தரவைப் பகிர்ந்து கொண்டனர், பின்னர் அது தவறான தகவல் என்பதை ஒப்புக்கொண்டனர். எதிர்க்கட்சிகள் ஒரு போலியான கதையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அது வெற்றிபெறாது என்று அவர் கூறினார்.

 Maharashtra Deputy Chief Minister Ajit Pawar has hit out at the Opposition leaders raising "non-issues" like an India-Pakistan cricket match, instead of talking about matters such as crop losses due to heavy rains or traffic congestion.

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க