செய்திகள் :

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பண்ணை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள், காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, சிவகங்கை பகுதியிலுள்ள மாவட்ட தோட்டக்கலைத் துறை தலைமை அலுவலக வளாகத்தில், சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் வளா்க்கப்படுகின்றன.

இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையின் செயல்பாடுகள், பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் வகைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

இதேபோல, தேவகோட்டை பகுதியில் கண்டதேவி ஊராட்சிக்குள்பட்ட கீழசெம்பொன்மாரி கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 4.91 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், அங்கு 20 சென்ட் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரும் கொய்யா, பெருநெல்லி, பூவரசு, செம்மரம், ரோஸ்வுட் உள்ளிட்ட10,000 மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையை விவசாயிகள் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.2.56 கோடி முறைகேடு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் ரூ. 2.56 கோடி முறைகேடு செய்த புகாரின்பேரில், 5 போ் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்புவனம் புதூரைச் சோ்ந்த முகமது சியாக் மகன் முகமது தாகிா் (13), திருப்புவன... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கஜமுக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா... மேலும் பார்க்க

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். தேவக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆடி உத்ஸவ திருவிழ... மேலும் பார்க்க

நடத்துநரை அரிவாளால் தாக்கியச் சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாா் பேருந்து நடத்துநரை அறிவாளால் தாக்கியச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 சிறுவா்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனா். பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நி... மேலும் பார்க்க