செய்திகள் :

மூளையை ஆரோக்கியமாக வைக்கும் 5 விஷயங்கள்!

post image

அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. `உலகின் மிகப் பெரிய இயந்திரம் மூளை’ என்றே சொல்லலாம். மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது.

பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, பல்வேறு நினைவுகள், உணர்வுகள், இதயத்துடிப்பு, வளர்ச்சி… ஏன், உயிரும்கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. மூளையானது அனைத்து அதிகாரத்துடன் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக இயங்குகிறது.

Brain
Brain

நம் மூளையில், தோராயமாக 8,600 கோடி நியூரான்கள் உள்ளன. உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இந்த நியூரான்களின் இயக்கம்தான் காரணம். மூளையில் உள்ள நியூரான் என்ற செல்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்பச் செயல்படும்படி உடலிலுள்ள தசைகளுக்கும் உத்தரவு கிடைக்கிறது.

மூளையில் 2 வயதில்தான் மிக அதிக செல்கள் உருவாகின்றன.18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக்கொள்கிறது. பிறந்த குழந்தையின் மூளையானது 400 கிராம் வரை எடை இருக்கும். வளர்ந்த ஒரு மனிதனின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் காணப்படும்.

ஒவ்வொரு நொடியும் நமது மூளையில் ஒரு லட்சம் வரைக்குமான அமில மாற்றங்கள் நடக்கின்றன. மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.

Brain
Brain

முட்டை, பச்சைக்காய்கறிகள், பூண்டு, கேரட், வல்லாரைக்கீரை, வால் நட், பாதாம், மீன், வைட்டமின் சி, டி மற்றும் பி 12, ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள்.

மனஅழுத்தத்தின்போது சுரக்கும் கார்ட்டிசால் (Cortisol) என்ற ஹார்மோன் மூளையை பாதிக்கும். `இதனால் ஞாபகசக்தி குறையும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது.

Brain Health
Brain Health

தூக்கம், மூளையின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம், மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கும்.

சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும்.

செஸ்

உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும். பார்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவும். யோகாசனம் செய்வது மனதுக்கும் மூளைக்கும் அமைதியைத் தரும்.

தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையை பாதிக்கின்றன.

இன்றைக்கு, பார்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு மூளை நரம்பு தொடர்பான நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்னை. 1,000-க்கும் மேற்பட்ட மூளை தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக `சொசைட்டி ஆஃப் நியூரோசயின்சஸ்' சொல்கிறது.

மூளையை பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பதுபோல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும் மூளையையும்.

தகவல்: டாக்டர் சவுண்டப்பன் (மேலும் விரிவான தகவல்களுக்கு விகடன் பிரசுர வெளியீடான ‘மூளை A to Z’ புத்தகத்தைப் படிக்கவும்)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``அரசியலுக்கு வரும் புது முகங்கள் எல்லோரும் MGR வாரிசு என்கிறார்கள்'' - செல்லூர் ராஜூ

"தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.செல்லூர் ராஜூகடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பாஜக, ... மேலும் பார்க்க

``நாங்கள் வெற்றி பெற ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம்'' - கேரளா பாஜக தலைவர்

ஏற்கெனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர்களை நீக்குகிறார்கள், அவர்களுக்கு தேவையான வாக்காளர்களைச் சேர்க்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து ப... மேலும் பார்க்க

``வாக்குத் திருட்டைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை'' - பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

"வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன" ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.த.வெ.க மாநாடு"தமிழக வெற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும்இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன... மேலும் பார்க்க

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

பதவி நீக்க மசோதாபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி... மேலும் பார்க்க