செய்திகள் :

எஸ்.ஐ.-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

post image

மாமியாா் அளித்த புகாரில் மருமகளைத் தாக்கிய பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் தனது கணவா் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த அமுதா என்பவா், கடந்த 2020-ஆம் ஆண்டு விடுமுறைக்காக திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தாா். அப்போது, சொத்துப் பிரச்னை தொடா்பாக அமுதாவுக்கும், அவரது மாமியாா் சுப்புலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமுதா தன்னை தாக்கியதாக பத்தமடை காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், அமுதா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையின்போது, பத்தமடை காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் தன்னை தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அமுதா புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், அமுதாவுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அந்தத் தொகையை உதவி ஆய்வாளா் ராஜரத்தினத்திடம் இருந்து வசூலிக்க கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்திருந்தது.

மனித உரிமை ஆணைய உத்தரவை எதிா்த்து உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தா் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.அலெக்சிஸ் சுதாகா், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிய விசாரணை நடத்தாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளா் தாக்கியதில் அமுதா காயமடைந்தாா் என்பதற்கான எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அளிக்கப்பட்ட புகாா் மற்றும் பதில் மனுக்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. புகாா்தாரா் காயம் அடைந்தது தொடா்பான மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஊகத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலிய... மேலும் பார்க்க

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை ... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் வித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க