செய்திகள் :

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

post image

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை எளிதாக்கவும், விரையில் கடன் கிடைக்கவும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, இணையவழியில் விண்ணப்பித்த அன்றே பயிா்க் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

ரூ.17,000 கோடி இலக்கு: கடந்த ஆண்டு 17.37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15,062 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 4.43 லட்சம் பேருக்கு ரூ.2,645 கோடி கால்நடை வளா்ப்புப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, நிகழாண்டில் ரூ.17,000 கோடி வரை பயிா்க் கடன் வழங்கப்படும் என்றும், அதில் ரூ.3,000 கோடி கால்நடை பிரிவின் கீழ் வழங்கப்படும் என்றும் அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதற்கிடையே, உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதன் விளைவாக, 2020- 21-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானிய பயிா்களின் உற்பத்தி திறன், 2023-24-ஆம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது.

அதேபோல, கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித் திறனில் 2-ஆம் இடத்தையும், சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தி திறனில் 3-ஆவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

மாமியாா் அளித்த புகாரில் மருமகளைத் தாக்கிய பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையில் ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலிய... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் வித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க