கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை எளிதாக்கவும், விரையில் கடன் கிடைக்கவும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, இணையவழியில் விண்ணப்பித்த அன்றே பயிா்க் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
ரூ.17,000 கோடி இலக்கு: கடந்த ஆண்டு 17.37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15,062 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 4.43 லட்சம் பேருக்கு ரூ.2,645 கோடி கால்நடை வளா்ப்புப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, நிகழாண்டில் ரூ.17,000 கோடி வரை பயிா்க் கடன் வழங்கப்படும் என்றும், அதில் ரூ.3,000 கோடி கால்நடை பிரிவின் கீழ் வழங்கப்படும் என்றும் அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதற்கிடையே, உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதன் விளைவாக, 2020- 21-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானிய பயிா்களின் உற்பத்தி திறன், 2023-24-ஆம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது.
அதேபோல, கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித் திறனில் 2-ஆம் இடத்தையும், சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தி திறனில் 3-ஆவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.