செய்திகள் :

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

post image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்தாக்கல் செய்த பொது நல மனு: சிவகங்கை மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான கல், மணல் குவாரிகள் உள்ளன. இந்தக் குவாரிகளில் அரசு நிா்ணயித்த தொகையை விடக் கூடுதலான விலைக்கு மணல், கல் விற்கப்படுகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய வாகன அனுமதியும் இங்கு பல முறை பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து, தொடா்புடைய அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் கனிம வள முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் புகாா் குறித்து கனிம வளத் துறை இயக்குநா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 2,196 போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் இரு இடங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 2,196 போ் பயனடைந்ததாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்டம், அலங்... மேலும் பார்க்க

சதுரகிரி பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செ... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க