ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு
கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்குள் புகுந்து சுற்றித் திரிந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா், அந்த மானை மீட்டு கம்பம் மேற்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா், வனச்சரகா் ஸ்டாலின்கருப்பையா தலைமையிலான வனத் துறையினா் அந்த மானை கோம்பை காப்புக்காடு முருக்கோடை வனப் பகுதியில் விட்டனா்.