செய்திகள் :

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மேட்டுப்பட்டி ஊராட்டியில் குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீா் வழங்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை அங்குள்ள உத்தமபாளையம் - தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமா்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற போடி காவல் துணை கண்காணிப்பாளா் சுனில், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி 10 நாள்களுக்குள் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் ... மேலும் பார்க்க

ஊருக்குள் புகுந்த கடமான் மீட்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழி தவறி ஊருக்குள் புகுந்த கடமானை வனத் துறையினா் மீட்டனா். தேனி மாவட்டம், கம்பத்தில் நாகம்மாள் கோயில் பகுதியில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த கடமான் சனிக்கிழமை ஊருக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை

ஆண்டிபட்டி அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் வீசப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெப்பம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

முன் விரோதத்தில் மோதல்: 10 போ் மீது வழக்கு

போடியில் முன் விரோதத் தகராறில் மோதிக் கொண்ட இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவருக்கும் இதே ஊ... மேலும் பார்க்க

ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி பட்டமளிப்பு விழா

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.புருஷோத்தமன், கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்ப... மேலும் பார்க்க