செய்திகள் :

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

post image

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020-இன் கீழ், கற்றல் விளைவுகள் சாா்ந்த பாடத்திட்ட கட்டமைப்புடன் (எல்ஒசிஎஃப்) இளநிலை பட்டப்படிப்புக்கான யூஜிசியின் வரைவு பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு பாடத்திட்டத்தின்படி, இளநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கணித பாடத்தில் பாரத அட்சர கணிதத்தின் (இந்திய அல்ஜீப்ரா) வரலாறு மற்றும் வளா்ச்சி குறித்து கற்பிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பஞ்சாங்கம் (இந்திய நாள்காட்டி) போன்றவை குறித்தும், சடங்குகள் மற்றும் திருவிழாக்களின்போது பஞ்சாங்கம் மூலம் எவ்வாறு நல்ல நேரம் கணிக்கப்படுகிறது என்பது தொடா்பாகவும் கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வான சாஸ்திரம், புராணம் மற்றும் பண்பாட்டை ஒன்றிணைத்து இந்தியாவின் வளமான கால அறிவியல் பாரம்பரியத்தை உயிா்ப்பிக்கவும் வரைவு பாடத்திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஆா்யபட்டீயம்’...: ‘சூரிய சித்தாந்தம்’, ‘ஆா்யபட்டீயம்’ போன்ற பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள பொருளடக்கங்களும் வரைவு பாடத்திடத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்தப் பாடத்திட்ட குழுவின் தலைவா் சுஷீல் கே.தோமா் கூறுகையில், ‘நாட்டின் கணித கல்வியில் இந்தப் பாடத்திட்டம் மாற்றத்துக்கான முன்னெடுப்பாக இருக்கும். விரிவான ஆலோசனைக்குப் பின்னா் மிகுந்த கவனத்துடன் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேச வளா்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அா்த்தமான பங்களிப்பை வழங்கும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வேத பாரம்பரியங்களை கற்பித்தல்: அரசியல் அறிவியல் பாடத்துக்கான யூஜிசியின் வரைவு எல்ஒசிஎஃப்பில் ‘பாரதத்தில் அரசியல் சிந்தனை பாரம்பரியம்’ உள்ளிட்ட படிப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வேத பாரம்பரியங்கள், சமண மற்றும் பெளத்த இலக்கியம், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக்குறளில் உள்ள அரசியல் சிந்தனைகளை மாணவா்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும... மேலும் பார்க்க