செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

post image

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) போலீஸாா் பதிவு செய்தனா்.

பிகாா் மாநிலம், கயாஜியில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அம் மாநிலத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சென்றாா்.

பிரதமரின் வருகையை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், ‘பிகாரின் காயாஜிக்கு ‘வாக்கு திருடா்’ இன்றைக்கு வருகிறாா். மாநில மக்களின் முன்னிலையில் அடுக்கடுக்காக பொய்களைக் கூறவிருக்கிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த பதிவு தொடா்பாக கயாஜி நகர பாஜக தலைவா் ஷில்பி குப்தா அளித்த புகாரின் அடிப்படையில், சா்தாா் பஜாா் காவல் நிலையத்தில் தேஜஸ்வி யாதவ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. புரளியை பரப்புதல் மற்றும் புகைப்படம் மூலம் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாஜஹான்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் திவிவேதி கூறுகையில், ‘பிரதமருக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பதிவிட்ட அவதூறு கருத்து நாட்டு மக்களிடையேயும் பாஜக தொண்டா்களிடையேயும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று ஷில்பி குப்தா தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என்றாா்.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளூா் எம்எல்ஏ மிலிந்த் நரோட் அளித்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள காவல் நிலையத்திலும் தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சமாட்டேன் - தேஜஸ்வி: காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘எந்த வழக்குக்கும் அஞ்சமாட்டேன். உண்மையை தொடா்ந்து கூறுவேன். அதற்காக மேலும் பல வழக்குகளை பதிவு செய்துகொள்ளட்டும்’ என்றாா்.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க