செய்திகள் :

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

post image

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனது அரசு இதை ஒருபோதும் அனுமதிக்காது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தாா்.

மேலும், குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்குவதற்கு மத்திய அரசு பின்பற்றும் அளவுகோல் என்ன என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

சண்டீகரில் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பகவந்த் மான், ‘பஞ்சாபில் 8,02,493 குடும்ப அட்டைதாரா்களை தகுதியற்றவா்கள் என்றும், அவா்களின் பெயா்களை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 4 உறுப்பினா்கள் என்று கருதினால், இது மாநிலத்தில் குறைந்தபட்சம் 32 லட்சம் பேரைப் பாதிக்கும்.

நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவா்கள் அல்லது 2.5 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்திருப்பவா்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவாா்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஒரு குடும்ப அட்டைதாரா் அரசு வேலை பெற்று தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயா்ந்தால், அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு குடும்ப அட்டை கிடைக்காதா?

ஒரு குடும்ப அட்டைதாரரிடம் காா் இருந்து, அவரது சகோதரருக்கு காா் இல்லை என்றால், மீதமுள்ள குடும்பத்தினா் என்ன தவறு செய்தனா்?ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க, எனது தலைமையிலான அரசு அனுமதிக்காது.

பஞ்சாபில் மொத்தமாக 1.53 கோடி குடும்ப அட்டை பயனாளிகள் உள்ளனா். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவா்களுக்கு மாதத்துக்கு 5 கிலோ கோதுமை கிலோ ரூ.2 என்ற விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், பல போலி பயனாளிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

பயனாளிகளை சரிபாா்க்க 6 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எழுப்புவேன். இது ஆம் ஆத்மி அரசு. எப்போதும் ஏழைகளின் பக்கமே நிற்கும்’ என்றாா்.

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க

உ.பி.யில் போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இணைந்து நடத்திய சோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுல், தேஜஸ்வி இருசக்கர வாகனப் பேரணி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் இருசக்கர வாகன... மேலும் பார்க்க