செய்திகள் :

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

post image

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களிடம் மோசடியாகப் பெறும் பணத்தை சைபர் கிரிமினல்கள் தங்களது வங்கிக்கணக்கில் வாங்காமல் அதனை வேறு ஒருவரின் வங்கிக்கணக்கில் வாங்கி அங்கிருந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்து கொள்கின்றனர். மும்பையில் இது போன்ற சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

இது போன்ற குற்றத்திற்குப் பயன்படுத்துவதற்காக அப்பாவி மற்றும் ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்குவதற்காகவே மும்பை காந்திவலி பகுதியில் ஒரு அலுவலகம் செயல்படுவதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

அவர்களிடமிருந்து விசாரணை நடத்தியதில் போலி வங்கிக்கணக்கு திறப்பது மற்றும் சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்காக சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து கொடுப்பது, வங்கிக்கணக்குகளை வாடகைக்கு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

வாடகை, விலைக்கு வாங்கப்பட்ட 943 வங்கிக்கணக்கு

அவர்களிடமிருந்து 50 வங்கி பாஸ்புக், 105 சிம்கார்டு, 484 ஏ.டி.எம் கார்டு, கார்டு ஸ்விப்பிங் மெஷின், 925 வங்கிக்கணக்கு விபரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அந்தேரி, தானே, டோம்பிவலி, கல்யான், அம்பர்நாத், பத்லாப்பூர், புனே போன்ற இடங்களில் ரெய்டு நடத்தி மேலும் 9 பேரைக் கைது செய்தனர். கைதான 12 பேரில் 5 பேர் காந்திவலி அலுவலகத்தை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இக்கும்பல் பொதுமக்களிடம் வங்கிக்கணக்கு திறக்கும்படி செய்கின்றனர். பின்னர் அந்த வங்கிக்கணக்கை இயக்கும் அதிகாரத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அந்த வங்கிக்கணக்கைச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ரூ.7 முதல் 8 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர்.

சில வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிதிக்குத் தக்கபடி கமிஷன் வாங்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராஜ் திலக் கூறுகையில், ''இக்கும்பல் விலைக்கு மற்றும் வாடகைக்கு வாங்கும் வங்கிக்கணக்கை சர்வதேச சைபர் கிரிமினல்களிடம் விற்பனை செய்து விடுகின்றனர். அந்த வங்கிக்கணக்கை வாங்கும் கும்பல் டிஜிட்டல் கைது, போலி ஆன்லைன் ஷாப்பிங், கடன் செயலி மோசடி, பங்குச்சந்தை மோசடி போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் 943 வங்கிக்கணக்குகளைக் கையாண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக மும்பையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையைத் தவிர்த்து மகாராஷ்டிராவில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.60 கோடி மோசடி

இந்த வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி மும்பையில் ரூ.1.67 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.10.57 கோடியும் என நாடு முழுவதும் மொத்தம் ரூ.60.82 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 277 புகார்கள் வந்திருக்கின்றன.

வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டதில் வங்கி அதிகாரிகள் சரியான நடைமுறையைப் பின்பற்றினார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

cyber crime
cyber crime

19 மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பாக 333 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதில் மும்பையில் கைதான கும்பலுக்குத் தொடர்பு இருப்பது அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

சைபர் குற்றம் தொடர்பாக நாடு முழுவதும் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களையும், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சைபர் குற்றம் மூலம் வாடகை வங்கிக்கணக்கில் பெறப்படும் பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க