செய்திகள் :

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

post image

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு 6ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பண பலன்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த 18ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனா்.

6ஆவது நாளான சனிக்கிழமை தொழிலாளா்கள் மத்தியில் உள்ள ஏற்ற, இறக்க வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் தராசு சின்னம் பொறித்த கோரிக்கை அட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியூ பொதுச் செயலா் ஜோதி தலைமை வகித்தாா். விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் அரசு வெங்கடாசலம், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகிகள் கண்ணன், ராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைவா் மணி, போராட்டத்தைத் தொடங்கி வைத்ததுப் பேசினாா்.

தூத்துக்குடி மாவட்ட சிஐடியூ பொருளாளா் அப்பாத்துரை, திருநெல்வேலி மாவட்ட பொதுச் செயலா் சிவ சங்கா், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க பொதுச் செயலா் முத்துசாமி ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 529 பேருக்கு பணிநியமன ஆணை

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 529 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெ... மேலும் பார்க்க