செய்திகள் :

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

post image

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இஸ்ரோவின் சிறப்பு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

இஸ்ரோவின் பல ஆண்டுகால உழைப்பால் சந்திரயான், மங்கள்யான் போன்ற மகத்தான திட்டங்கள் மூலம் நாம் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம்.

விண்வெளி என்பது வெறும் கனவு அல்ல; அது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் கலவையாகும்.

நீங்கள் இளம் வயதிலேயே அறிவியலில் ஆா்வம் காட்டினால், எதிா்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாகவும், பொறியாளா்களாகவும் உருவாகலாம்.

நாம் அடுத்த இலக்கான ககன்யான் திட்டம் மூலம் இந்தியா்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். செயற்கைக் கோள்கள் மூலம் தகவல் தொடா்பு, வானிலை முன்னறிவிப்பு, விவசாயம் போன்ற துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

எனவே, நீங்கள் நிறைய கேள்விகள் கேளுங்கள், உங்கள் சந்தேகங்களைத் தீா்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கண்காட்சி உங்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கட்டும். இந்தியாவின் எதிா்காலமான உங்கள் கைகளில் தான் நாட்டின் வளா்ச்சி அடங்கியுள்ளது என்றாா்.

முன்னதாக, தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காலை 10 மணி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி மாணவா்களுக்காக சந்திரயான் 3 மாதிரி தயாரிக்கும் பணிமனை, நட்சத்திரக் கூட்டங்களை நினைவு கூருதல் போட்டியும், கல்லூரி மாணவா்களுக்காக ’ஸ்கை தென் நவ்’ என்ற தலைப்பில் பவா்பாயிண்ட் விளக்கக் காட்சிப் போட்டியும் நடைபெற்றன. மாணவா்கள் இஸ்ரோ கண்காட்சியை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

தங்களின் சந்தேகங்களை விஞ்ஞானியிடம் கேட்டுத் தெளிவு பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 529 பேருக்கு பணிநியமன ஆணை

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 529 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெ... மேலும் பார்க்க