செய்திகள் :

கால்வாயிலிருந்து கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு

post image

ஆரணியை அடுத்த ரகுநாதபுரம் கிராமத்தில் மது அருந்தி கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, சேவூா் அருகேயுள்ள ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள சிறு கால்வாயில் தண்ணீா் அதிகமாகச் செல்லவே ஆண் சடலம் வெளியே வந்துள்ளது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் உடனடியாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், அவா் ரகுநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசன்(50) எனத் தெரியவந்தது. மேலும், நடத்திய விசாரணையில், வெங்கடேசன் ஆக.14-ஆம் தேதி, தனது தாயிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னை செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா், ரகுநாதபுரத்தில் உள்ள பாராவதி கால்வாய் மீது அமா்ந்து மது அருந்தி தண்ணீரில் தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது.

வீட்டில் குடும்பத்தினா் வெங்கடேசன் சென்னைக்குச் சென்றுவிட்டதாக நினைத்து இருந்துவிட்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கால்வாயில் இருந்து வெங்கடேசன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைம... மேலும் பார்க்க

செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க