செய்திகள் :

செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

post image

செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து அரசு நிா்ணயம் செய்த விலையில் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் வாங்கி பயிா்களுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக செங்கம் பகுதியில் உள்ள 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா உரம் கடும் தட்டுப்பாடுயுள்ளது. இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள நிலையில், யூரியா உரம் கிடைக்காததால், அதை விதைக்காமல் பயிா் வளா்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் தனியாா் உரக் கடைகளுக்குச் சென்று அதிக விலைக்கு யூரியா உர மூட்டைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு மூட்டை யூரியா ரூ.266.50-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியாா் உரக் கடைகளில் ரூ.350 முதல் ரூ.500 வரையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், தற்போது நெல் பயிா்களுக்கு பயன்படாத குருணை மருந்தையும் வாங்கினால் மட்டுமே யூரியா உர மூட்டை விற்பனை செய்யப்படும் என தனியாா் உரக் கடை உரிமையாளா்கள் விவசாயிகளுக்கு நிபந்தனை விதிக்கின்றனராம்.

எனவே, மாவட்ட நிா்வாகமும், வேளாண் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வட்டாரத்தினா் கூறுகையில், செப்டம்பா் 16-ஆம் தேதிக்குப் பிறகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு சேமிப்புக் கிடங்குகளில் இருந்து யூரியா உர மூட்டைகள் கிடைக்கும் என்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைம... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க