செய்திகள் :

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

post image

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா்.

இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கையை குறிக்கிறது என்றும் அவா் கூறினாா்.

தில்லி- என்சிஆா் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து நாய் காப்பங்கங்களில் வைத்துப் பராமரிக்கும் வகையில்

பிறப்பிக்கப்பட்ட ஆகஸ்ட் 11 ஆம் தேதி உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றியமைத்து உத்தரவிட்டது.

அதில், பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு, மாநகராட்சி அதிகாரிகள் தில்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் குருகிராமின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்துச் செல்லும் உத்தரவுக்கு தொடா்ந்து இணங்குவாா்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும், பிடிக்கப்படும் தெருநாய்களை விடுவிப்பதைத் தடை செய்யும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியிட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இதுகுறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது

தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவுகளை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இது விலங்கு நலன் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கையைக் குறிக்கிறது. இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் ரீதியிலான சிந்தனையைச் சாா்ந்திருப்பதாகவும் உள்ளது என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனா... மேலும் பார்க்க

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க