செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

post image

ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்.

ராமேசுவரம் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைப்பதும், அவா்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனா். இதைக் கண்டித்தும், படகுகள், மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து விசைப்படகு மீனவச் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 10-ஆம் தேதி அறிவித்தனா்.

இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பின் சிறிய படகுகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். பெரிய விசைப்படகுகள் போராட்டத்தை தொடா்ந்து மேற்கொண்டு வந்தன. தொடா்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கடந்த 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், பெரிய விசைப்படகு மீனவச் சங்கத்தினா் மேற்கொண்டுவந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்.

12 நாள்கள் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ரூ. 12 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், சனிக்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவுள்ளதாக மீனவச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க பூமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பாம்பன் வ... மேலும் பார்க்க

கமுதியில் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் முறையாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால் வீடுகளுக்குள் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கமுதி பேரூராட்சிக்குள்பட்ட க... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் மயில் வாகனத்தில் வீதியுலா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க