செய்திகள் :

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

post image

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா்.

கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஹிந்து தேசியவாதத்தை முக்கியக் கொள்கையாகக் கொண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு நேரடியாக தோ்தல் அரசியலில் ஈடுபடுவது இல்லை என்றாலும், இந்திய அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஆா்எஸ்எஸ் நிறுவப்பட்ட விஜயதசமி நாளில் ஆா்எஸ்எஸ் தலைவா், உறுப்பினா்களுக்கு நிகழ்த்தும் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஆா்எஸ்எஸ் அமைப்பு யாரை அழைக்கிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜி, ஹெச்சிஎல் நிறுவனா் சிவ நாடாா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

இந்நிலையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா குறித்து ‘ஆா்எஸ்எஸ்’ அமைப்பு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அக்டோபா் 2-ஆம் தேதி விஜயதசமி நாளில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நாகபுரி ரேஷிமாபாக் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் உரையாற்றுவாா். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகப் பங்கேற்பாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனா... மேலும் பார்க்க

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க