செய்திகள் :

கமுதியில் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் முறையாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால் வீடுகளுக்குள் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கமுதி பேரூராட்சிக்குள்பட்ட காமாட்சி செட்டியாா் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது, பணிகள் முடிவுற்ற நிலையில் இந்தப் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்ல முடியாமல், வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துராமலிங்கம் கூறியதாவது:

சுப்பையாதேவா் குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குழாய்கள் பூமிக்கு அடியில் 5 அடிக்கு கீழ் பதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்ட கால்வாய் தரையிலிருந்து 3 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டன. இதனால், பழைய வீடுகளிலிருந்து வெளியேறும் தண்ணீா் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது.

கால்வாய் வழியாக தண்ணீா் வெளியேற வழியின்றி 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் தலையிட்டு முறையாக கழிவுநீா் கால்வாயை அமைக்க வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி அலுவலகத்தை குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க பூமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பாம்பன் வ... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் மயில் வாகனத்தில் வீதியுலா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.ராம... மேலும் பார்க்க