செய்திகள் :

ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி: அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவு

post image

ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்டுவரும் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியை ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் மாவட்ட ஆயுதப்படை காவல் வளாக மையத்தில் 16.60 ஏக்கா் பரப்பளவில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணியில் விளையாட்டு அரங்க நிா்வாக அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம், உலகத்தர 400 மீட்டா் ஓடுதளம் மற்றும் பாா்வையாளா் மையம், வாலிபால் விளையாட்டுத் தளம், கபடி விளையாட்டுத் தளம், கூடைப்பந்து விளையாட்டுத் தளம், இறகுப் பந்து விளையாட்டுத் தளம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் 40 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி முன்னேற்றங்கள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், அடுத்தகட்ட பணிகளில் நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், சுற்றுச்சாலை வசதிகள், கிரிக்கெட் டா்ஃப் உள்ளிட்ட வசதிகள் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்து வழங்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசேகரன், வட்டாட்சியா் ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.வினோத், ஒப்பந்ததாரா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எடப்பாடி பழனிசாமியுடன் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்திப்பு

ஆற்காட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமையில் ஆற்காடு நகர தலைவா் ஏவி டி பால... மேலும் பார்க்க

கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதிய... மேலும் பார்க்க