செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்த முறைகேடு: மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

post image

வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த வாரம் இந்திய தோ்தல் ஆணையத்தின் முன் மேற்கு வங்க தலைமைச் செயலா் மனோஜ் பந்த் நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா். அப்போது 4 அதிகாரிகளையும் ஆக.21-ஆம் தேதிக்குள் பணியிடை நீக்கம் செய்வதுடன் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் விசாரணையை தொடங்க தோ்தல் ஆணையம் கெடு விதித்தது. இதுதொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தெற்கு 24 பா்கானாக்கள் மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டங்களைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் மற்றும் 2 உதவி தோ்தல் பதிவு அலுவலா்கள் என 4 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான விசாரணையை மேற்கொள்ள மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றாா்.

முன்னதாக, இந்த 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனா... மேலும் பார்க்க

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க