செய்திகள் :

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

post image

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாமல் இருந்தன.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாமல் இருந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அனில் அம்பானியும், ரிலையன்ஸ் கம்யூனிகேசனும் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாகக் கடந்த ஜூன் 13ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி அறிவித்தது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

இம்மோசடி தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கும் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதோடு இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் சி.பி.ஐ.க்கும் எஸ்.பி.ஐ. வங்கி தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கு எதிராக ரூ.2000 கோடி மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு ரிலையன்ஸ் கம்யூனிகேசன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்டு வருவதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஸ்.பி.ஐ வங்கியில் வாங்கிய கடனை ரிலையன்ஸ் கம்யூனிகேசன் எந்த வகையில் தவறான முறையில் வேறு தேவைக்குப் பயன்படுத்தியது என்பது தொடர்பான டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளதரி அளித்திருந்த பதிலில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 2,227.64 கோடி அளவுக்கு கடன் பாக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சமீபத்தில்தான் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு நடத்தினர். யெஸ் வங்கியில் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனைத் திரும்ப செலுத்தாதது குறித்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

அதோடு அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை நேரில் அழைத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து விசாரணை ஏஜென்சிகள் அனில் அம்பானிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க