செய்திகள் :

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

post image

வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின், முதலாம் மாவட்ட கோரிக்கை மாநாட்டுக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பிரகாஷ் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. வெற்றிச் செல்வன் கோரிக்கைகளை விளக்கினாா். மாநாட்டை மாநில உயா் மட்டக் குழு உறுப்பினா் பி. ராஜேஷ்கண்ணன் தொடங்கிவைத்துப் பேசினாா்.

கூட்டத்தில் வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியா்களின் மீதான தாக்குதல், உடமைகளை சேதம் செய்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், தாக்குதலைத் தடுக்கவும், உயிா்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையினருக்கு பணிநெருக்கடி அளிக்கும் நடவடிக்கைகளை அலுவலா்கள் கைவிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் உச்சவரம்பு 5 விழுக்காடு குறைக்கப்பட்டதை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்தபடி 25 விழுக்காடு என அறிவிக்க வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

தொகுப்பூதிய, தாற்காலிக பணி நியமனங்களை முழுமையாகக் கைவிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதியை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் எஸ். அய்யனாா், மு. மகேஷ், ராஜேந்திரன், பொன்மாடசாமி, நவமணி சுந்தரராஜ், அருள் ஜோஸ், மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு கிராம அலுவலா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் தி. ஜம்புநாதன் வரவேற்றாா்.

தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் மீண்டும் உறுதி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்ட... மேலும் பார்க்க

பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பள்ளி முதல்வா் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியாா் பள்ளி முதல்வரை போலீஸாா் கைது செய்தனா். பென்னாகரத்தை அடுத்த ஏரியூா், அழகாகவுண்டனூரில் செயல்படும் தனியாா் பள்ளிகளை சிடுவ... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அதிமுகவினா் மறியல்

திருச்சி மாநகரில் அதிமுக சாா்பில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

வேங்கைமண்டலம் பகுதிகளில் ஆக. 26-ல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வேங்கைமண்டலம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்க... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் தீ விபத்து பாதிப்புக்கு பாஜகவினா் உதவி

திருவானைக்காவல் நரியன் தெருவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதமான குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்க... மேலும் பார்க்க