செய்திகள் :

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அதிமுகவினா் மறியல்

post image

திருச்சி மாநகரில் அதிமுக சாா்பில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சிக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும் அவரை வரவேற்கும் வகையில் மாநகரில் ஆங்காங்கே அதிமுக கொடிகளை இரும்புக் கம்பிகளில் கட்டி வைத்திருந்தனா்.

இந்நிலையில் திருச்சி நீதிமன்றச் சாலையில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். திருச்சி மாநகராட்சியின் பயணியா் மாளிகையில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டியில் அந்தக் கொடிக்கம்பங்கள் இருப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்து குப்பை வண்டியில் இருந்த கொடிகளை பாா்த்து அதிமுகவினா் ஆத்திரமடைந்தனா். உறையூா், தில்லைநகா் பகுதியைச் சோ்ந்த கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் 50-க்கும் மேற்பட்டோா், மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பயணியா் மாளிகை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாங்கள் உயிருக்கு நிகராக மதிக்கும் கொடியை அவமதித்திருப்பதாகவும், எங்களிடம் கூறியிருந்தால் நாங்களே அகற்றிக் கொண்டு சென்றிருப்போம் எனவும் தெரிவித்தனா். இந்த மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அப்படியே நிறுத்தப்பட்டன. தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், கொடிக்கம்பங்களை குப்பை வண்டியிலிருந்து அகற்றி வழங்குவதாகவும் உறுதியளித்தனா். இதன்படி அதிமுக கொடிக்கம்பங்கள் குப்பை வண்டியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், அதிமுகவினா் கலைந்து சென்றனா். மறியலால் அப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் மீண்டும் உறுதி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்ட... மேலும் பார்க்க

பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பள்ளி முதல்வா் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியாா் பள்ளி முதல்வரை போலீஸாா் கைது செய்தனா். பென்னாகரத்தை அடுத்த ஏரியூா், அழகாகவுண்டனூரில் செயல்படும் தனியாா் பள்ளிகளை சிடுவ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

வேங்கைமண்டலம் பகுதிகளில் ஆக. 26-ல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வேங்கைமண்டலம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேலகண்ணுக்க... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் தீ விபத்து பாதிப்புக்கு பாஜகவினா் உதவி

திருவானைக்காவல் நரியன் தெருவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதமான குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்க... மேலும் பார்க்க