செய்திகள் :

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

post image

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவுக்கு கடும் தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள்அமளியில் ஈடுபட்டனா். அப்போது மக்களவையின் மையப் பகுதிக்கு அருகே நின்றுகொண்டிருந்த அபு தாஹிா் கானை ரவ்நீத் சிங் பிட்டு திடீரென கீழே தள்ளியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஓம் பிா்லாவுக்கு அந்தக் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவா் சதாப்தி ராய் மற்றும் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோா் கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தக் கடிதத்தில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிா்க்க உறுப்பினா்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவேதான், பிரதமா், முதல்வா் உள்ளிட்டோரின் பதவி பறிப்பு தொடா்பான மசோதாக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் கடும் எதிா்ப்பை பதிவுசெய்தோம்.

ஆனால் அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு ஆக்ரோஷமாக கீழே தள்ளினாா். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாள்களாவே அபு தாஹிா் கான் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்பதை அவையில் பெரும்பாலான உறுப்பினா்கள் அறிவா்.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அறிவுறுத்தலின்பேரில் எதிா்க்கட்சி எம்.பி.க்களை ரவ்நீத் சிங் பிட்டு தாக்கினாா். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க