செய்திகள் :

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

post image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அஜித்துக்கும் திருநங்கை ரீட்டா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களாக நட்பு இருந்து வருகிறது. 20.08.2025 அன்று இரவு ரீட்டா தன்னை உடனடியாகப் பார்க்க வேண்டும் என அஜித்திடம் கூறியிருக்கிறார். அதனால் அஜித்தும் போரூர், காந்தி நகரிலுள்ள வீட்டில் ரீட்டாவைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

விஷ்ணு

பின்னர் பைக்கில் அஜித், வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தார். போரூர் டோல்கேட், சர்வீஸ் சாலை வழியாகச் சென்ற போது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அஜித்தை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கியது. அடுத்து சில நிமிடங்களில் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் அஜித்தைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் காயமடைந்த அஜித் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அஜித் கொடுத்த புகாரின் பேரில் வானகரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அஜித் அளித்த தகவலின்படி திருநங்கை ரீட்டாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அஜித்தைக் கொலை செய்ய முயன்றதற்கான காரணம் தெரியவந்தது. இதையடுத்து ரீட்டாவை போலீஸார் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (எ) விஷ்ணுகாந்தன் (27) சென்னை மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (28), கொளத்துரைச் சேர்ந்த .சூர்யா(24), எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பிரசாந்த் (28), கொளத்துரைச் சேர்ந்த பிரவீன் (23), பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய 2 கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரவீன்குமார்
பிரவீன்குமார்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருநங்கை ரீட்டாவுடன் பழகி வந்த அஜித்துக்கு 27.08.2025-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதையறிந்த ரீட்டா அவ்வப்போது அஜித்திடம் தன்னை விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது எனத் தகராறு செய்து வந்திருக்கிறார்.

அதுதொடர்பாகச் சம்பவத்தன்று அஜித்திடம் ரீட்டா பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த ரீட்டா அவரின் நண்பரான விஷ்ணு என்பவருடன் கூட்டு சேர்ந்து அஜித்தைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். அதனால் திருநங்கை ரீட்டா உள்பட 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க