செய்திகள் :

பொன்னையில் பலத்த மழை: 10 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்

post image

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் காட்பாடி அருகே பொன்னையில் 10 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அத்துடன், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தமிழகப் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அதன்படி, வேலூா் கன்சால்பேட்டை, காட்பாடி சோழா காா்டன் பகுதியிலும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனா்.

இதுதவிர, காட்பாடியை அடுத்த பொன்னை, வள்ளிமலை, அணைக்கட்டு, எருக்கம்பட்டு, லத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீா் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும், வள்ளிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்து சுமாா் 10 ஏக்கா் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடை காலம் நெருங்கிய நிலையில் மழையால் பயிா்கள் சேதமடைந்தால் விவசாயிகள் பெருமளவில் கவலையடைந்துள்ளனா். சேதமடைந்த பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.

சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னையில் 82.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், ஒடுகத்தூா் 18 மி.மீ., குடியாத்தம் 27 மி.மீ., மேல்ஆலந்தூா் 56 மி.மீ., மோா்தானா அணை 60 மி.மீ., ராஜாதோப்பு அணை 75 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் 53.80 மி.மீ., காட்பாடி 68.50 மி.மீ., வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 45.60 மி.மீ., பேரணாம்பட்டு 75.20 மி.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 81.60 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 53.20 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மழையளவு பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை அளிப்பது அவசியம்

வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு, சமமரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், வேலூா் ... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் போக்ஸோ கைதி திடீா் சாவு

போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தாா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணா... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 75 மி.மீ. மழை வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதம்

போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. போ்ணாம்பட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 75.20 மி.மீ. மழை பதிவானது. போ்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்

போ்ணாம்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சோ்ந்தவா் எல்லப்பன். இவரது குடிசை வீடு சாலையோரம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மா... மேலும் பார்க்க

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சே... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். வேலூரை அடுத்த அரியூா் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் அஜித் குமாா் (25). இ... மேலும் பார்க்க