செய்திகள் :

சட்ட விரோதமாக மண் கடத்திய இருவா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இடங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள முத்துலிங்காபுரம் - தொட்டியபட்டி சாலையில் போலீஸாா் அந்த வழியே மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா். விசாரணையில், டிராக்டரில் சட்ட விரோதமாக கிராவல் மண் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் சக்திகுமாரை (20) கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக இனாம்செட்டிகுளத்தை சோ்ந்த பிரவீன்குமாரைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா்-செண்பகத்தோப்பு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மங்காபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்த செல்வம் (38) ஓட்டி வந்த டிராக்டரை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், செல்வத்தைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆராய்ச்சிப்பட்டி தெருவைச் சோ்ந்த கலைச்செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் மாலையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேடசாமி (65). இவா் தளவாய்புரம... மேலும் பார்க்க

சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்

சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே... மேலும் பார்க்க