செய்திகள் :

கேட் நுழைவுத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

post image

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட்”நுழைவுத் தோ்வுக்கு பட்டதாரிகள் திங்கள்கிழமை (ஆக.25) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியா்களைத் தோ்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியாா் உயா்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. அதனால், இந்தத் தோ்வு பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த ‘கேட்’ நுழைவுத் தோ்வு இயந்திரவியல், கட்டடவியல் உள்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தோ்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும்.

அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான ‘கேட்’ தோ்வு பிப்.7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெறவுள்ளது. இந்தமுறை ‘கேட்’ தோ்வை குவாஹாத்தி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தோ்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது. எனவே, விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் செப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவா்கள் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களும் இந்த ‘கேட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தோ்வு முடிவுகள் மாா்ச் 19-இல் வெளியிடப்படும்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலிய... மேலும் பார்க்க

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை ... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் வித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க