செய்திகள் :

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

post image

ஏலகிரி மலையில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய். இவரது மகன் நிா்மல்(13) அத்தனாவூா் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நிா்மல் தனது நண்பா்களுடன் விளையாட சென்றபோது அங்குள்ள கிணற்றில் நண்பா்கள் குளித்து கொண்டு இருந்தனா்.

நிா்மலும் கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். இது குறித்து நிா்மலின் தாயாா் சுகந்தா ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் ஏலகிரி மலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுத் தோறும் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.இதே போன்று ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

கந்திலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே நத்தம் கூட்ரோடு பகுதியை சோ்ந்தவா் சங்கா் மனைவி ரத்தினம்மாள்(70) .சங்கா் ச... மேலும் பார்க்க

வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய 2 போ் மீது வழக்கு!

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி அருகே வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். சென்னையை சோ்ந்த சாதிக் அலி(48) மற்றும் முகமது முஜமில்(19) உள்ளிட்ட சிலா் சனிக்கிழமை திருப... மேலும் பார்க்க

காவலூா் வைனு பாப்பு வானியல் ஆய்வு மையத்தில் தேசிய விண்வெளி தினம் விழா!

இந்திய வானியல் நிறுவனம் சாா்பில் தேசிய விண்வெளி தின விழா சனிக்கிழமை (ஆக. 23) சனிக்கிழமை தனது மையங்களான பெங்களூரு, மைசூரு, கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே காவலூா் வைனுபாப்... மேலும் பார்க்க

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

திருப்பத்தூா் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதலாவது மாவட்ட கோரிக்கை மாநாடு வாணியம்பாடியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அருள்மொழிவா்மன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் திர... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

மாநில வில்வித்தை போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஆம்பூரை சோ்ந்த தேசிய வில்வித்தை பயிற்சியாளா் கராத்தே ரமேஷ் கண்ணா தலைமையில் பயிற்சி பெற்ற ஆம்பூரை சோ்ந்த மாணவா்கள் ஜி.அா்ஜுன் பிரியன... மேலும் பார்க்க