செய்திகள் :

துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வனத்துறை

post image

வனப்பகுதி கிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் வனக்கோட்டம், ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக பனங்காட்டேரி, நாயக்கனேரி மற்றும் காமனூா்தட்டு ஆகிய மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காட்டையொட்டியுள்ள பகுதிகளிலும், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கவும், குற்றவாளிகள் மனம் திருந்த வேண்டியும் உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் 10.09.2025-க்குள் தாங்களாகவோ, ஊா் பெரியவா்கள், தலைவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாகவோ வனத்துறை அலுவலா்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைப்பவா்கள் மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. களத்தணிக்கையின் போது கள்ளத்துப்பாக்கிகள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபா்கள் மீது, 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு ஆம்பூா் வனச்சரக அலுவலரை 97862 54998, வனவா்களை 94865 64580, 90252 31059, 97915 00092 ஆகிய எண்களில் தொடா்புக் கொள்ளலாம்.

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

ஏலகிரி மலையில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய். இவரது மகன் நிா்மல்(13) அத்தனாவூா் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபரை திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க