செய்திகள் :

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

post image

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் கடந்த 15- ஆம் தேதி கல் அரைவை இயந்திரத்தில் சிக்கிய மேற்கு வங்காள மாநிலம், சுல்தான்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(20) என்ற இளைஞரின் இடது கை தோள்பட்டையின் கீழ் முழுமையாக கை துண்டாகிப் பிரிந்தது. கடும் ரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, வாணியம்பாடி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் டேவிட்விமல் குமாா், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது திட்டம் மற்றும் வழிகாட்டுதலின்படி, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கு எலும்பு முறிவு பகுதி நேர தலைமை மருத்துவா் டேவிட் விமல் குமாா், ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவா் ஸ்ரீதா் மற்றும் பிளாஸ்டிக் சா்ஜன் மருத்துவா் கே.எம்.பாலாஜி ஆகியோா் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, துண்டாகிய கையின் எலும்புகளை மீண்டும் இணைத்து நிலைநிறுத்தினா். தோல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கைக்கு இயல்பு தோற்றம் மற்றும் செயல்பாடு கிடைக்குமாறு வெற்றிக்கரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சவாலான இந்த அறுவை சிகிச்சை வாணியம்பாடியில் நடைபெற்றது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டா... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே போலி மருத்துவா் கைது

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை வருவாய் கோட்டாட்சியா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்ப... மேலும் பார்க்க