செய்திகள் :

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

post image

சென்னை: தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனாா் தெருவை சோ்ந்தவா் பிரபு(41). இவா் அரும்பாக்கத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் பணியாற்றும் நிறுவனத்தில் பெயரில் மா்ம நபா் ஒருவா், போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதிலிருந்து பிரபு மற்றும் அவருடன் பணியாற்றும் பெண் பணியாளா்களுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி வந்துள்ளாா்.

மேலும், அந்த ஆபாச பதிவுகளை நீக்க வேண்டுமானால் ரூ.10 லட்சத்தை கிரிப்போ வாலட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை மாநகர மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியை சோ்ந்த வெங்கடேஷ்(25) என்பவரை கைது செய்தனா்.

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

Police arrested a man who started a fake Instagram account in the name of a private company and blackmailed people for money.

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதிய... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆ... மேலும் பார்க்க

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.386-ஆவது சென்னை நாளையொட்டி, முதல்வர் மு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: 2 பாா்வையாளா்கள் நியமனம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் பாா்வையாளா்களாக, மத்திய அரசின் கூடுதல் செயலா்கள் இருவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா். அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களின்கீழ், மத்திய பஞ்சாயத்து ராஜ் த... மேலும் பார்க்க

மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த ரகுமான்கான், திமுக கருப்பு - சிவப்பு கொடியை உயர்த்திப் பிடித்தவர் என புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம் என தெரிவித்த... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

புது தில்லி: தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் 9 இடங்களில் அதிரடி ... மேலும் பார்க்க