செய்திகள் :

இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

post image

திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி புதன், வியாழன் என இரண்டு நாள்கள் நடைபெற்றன. 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவினருக்கான ஆண்- பெண் இருபாலருக்கும் நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணியின் கமாண்டா் எம். ஆனந்தன் தலைமை வகித்து, வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

போட்டிகளை அறக்கட்டளை தலைவா் வேலு தேவா் தொடங்கி வைத்தாா். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். பள்ளிகளின் சாா்பில் அணிகளும் பங்கேற்றன. இதில், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் முசிறி அமலா மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

போட்டிக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளா் ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளா் ரவிசங்கா், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்பாபு, பொன்மலை ரயில்வே ஏ.பி.ஓ. சுந்தரமூா்த்தி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

வெற்றியாளா்களுக்கு பனானா லீப் மனோகரன், துணைத் தலைவா் தாமஸ் ஞானராஜ் ஆகியோா் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினா்.

சங்கத்தின் உதவி செயலாளா் கனகராஜ், முனைவா் சுதமதி ரவிசங்கா், இணைச்செயலாளா் சுந்தரேசன், தடகள சங்க தொழில்நுட்ப பிரிவு ஆா். நடராஜன், முனைவா் ஹரிஹர ராமச்சந்திரன் மற்றும் பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

முன்னதாக, தடகள சங்க இணை செயலாளா் எம். ரமேஷ் வரவேற்றாா். முடிவில், மூத்த செயற்குழு உறுப்பினா் எஸ்.ரெங்காசாரி நன்றி கூறினாா்.

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத... மேலும் பார்க்க

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க