செய்திகள் :

300 கிலோ எடையுடன் சிறைக்கைதி! ஒருநாள் பராமரிப்புச் செலவு ரூ.1 லட்சமா?

post image

ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதி அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சராசரி சிறைக் கைதிக்கான பராமரிப்புச் செலவை விட பத்து மடங்கு அதிகம் இவருக்கு மட்டும் செலவாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 29 வயதான கைதிக்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டுமா என்று, இந்த செய்தி வெளியானதிலிருந்து அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்த நபரின் வீட்டில் சோதனை செய்தபோது, ஏராளமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இவரை வியன்னா சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு இவரை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கோர்நெபர்க் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இந்த சிறையில் இவருக்காக சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிகளை வெல்டிங் செய்து பெரிய கட்டிலும், இவருக்காக கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனிக்க செவிலியரும் பணியமர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறாராம்.

இதன்படி, அந்த நாட்டின் நீதித்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவு என்பது ரூ.6000 ஆக இருக்கும் நிலையில், இவரைப் பராமரிக்க ரூ.1.6 லட்சம் ஆவதாகவும், (ஒரு நாளைக்கு) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சாதாரண குடிமகன், மருத்துவரைப் பார்க்க ஒருமாதத்துக்கும் மேல் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் நாடு இருக்கிறது. ஆனால், ஒரு கைதிக்கு நாட்டின் வளம் மற்றும் குடிமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சிறைக் கைதிகளுக்கான செலவுகள் மற்றும் சிறைப் பராமரிப்புக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து அந்நாட்டில் பெரிய விவாதமே வெடித்திருக்கிறது.

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார்.சீனாவின் வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன்... மேலும் பார்க்க

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து ... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க