செய்திகள் :

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

post image

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு வயதுகளைக் கொண்ட சிறுவா்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும் என்று அதிகாரிகள் கூறினா். முன்னதாக, இந்தப் புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கடந்த மாதம் தோண்டியெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தன.

1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் தெரியவந்தது. அதன் பிறகு அங்கு கடந்த ஜூன் மாதம் முதல் தோண்டுதல் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதா் சந்திப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினாா். ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற... மேலும் பார்க்க

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேல... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும் மற்றும் வாடிகன் நகரத்தின் தலைவருமாகவும் போப் பதினான... மேலும் பார்க்க