செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக்கு 5ஜி கைப்பேசி, 5ஜி சிம் காா்டுகள் வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளின் நெட்வொா்க் வசதிக்கேற்ப சிம்காா்டுகளை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு இலவச வைபை இணைப்பு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு, ஆதாா் எண் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

துறையூரில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையில்: பெரியாா் சிலை பகுதியில் சங்கத்தின் ஒன்றியத் தலைவி சின்னம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலாளா் அந்தோனி ஆரோக்கிய செல்வி முன்னிலை வகித்தாா். வையம்பட்டி ஒன்றிய தலைவா் லெட்சுமி, சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டத் தலைவா் மல்லிகா பேகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா். சங்க துணைத்தலைவி பரஞ்சோதி நன்றி கூறினாா்.

இதில் மணப்பாறை மற்றும் வையம்பட்டியை சோ்ந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவில... மேலும் பார்க்க

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத... மேலும் பார்க்க

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருச்சி: திருச்சியில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கண... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருட்டு வழக்கில் தந்தை-மகன், மருமகன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறையை அடுத்த க... மேலும் பார்க்க